நீலகிரியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

 

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் நாளது வரையில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகிற 31.08.2017 அன்று இம்மாவட்டத்தில், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகூர், தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, உல்லத்தி, கடநாடு, இத்தலார், கக்குச்சி, நஞ்சநாடு மற்றும் பாலகொலா ஆகிய 10 கிராம் ஊராட்சிகளிலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேனாடு, கெங்கரை, கொணவக்கொரை, நடுஹட்டி மற்றும் நெடுகுளா ஆகிய 5 கிராம ஊராட்சிகளிலும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதுமலை ஊராட்சியில் அனைத்து இல்லங்களிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகளை கட்டப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உதகை பிரீக்ஸ் பள்ளியில், முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஸ்கிருஸ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...