நீலகிரியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

 

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ் நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் நாளது வரையில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருகிற 31.08.2017 அன்று இம்மாவட்டத்தில், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிகூர், தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, உல்லத்தி, கடநாடு, இத்தலார், கக்குச்சி, நஞ்சநாடு மற்றும் பாலகொலா ஆகிய 10 கிராம் ஊராட்சிகளிலும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேனாடு, கெங்கரை, கொணவக்கொரை, நடுஹட்டி மற்றும் நெடுகுளா ஆகிய 5 கிராம ஊராட்சிகளிலும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதுமலை ஊராட்சியில் அனைத்து இல்லங்களிலும் தனி நபர் இல்லக் கழிப்பறைகளை கட்டப்பட்டு திறந்த வெளியில் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உதகை பிரீக்ஸ் பள்ளியில், முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஸ்கிருஸ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...