கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம் வார்டு எண்- 83-ல் ராஜ வீதி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலித்தமைக்காக உதவி ஆணையர் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, நான்கு சக்கர வாகனத்திற்கு 6 மணி நேரத்திற்கு ரூ.10 வசூல் செய்யாமல் கூடுதலாக ரூ.20-யினை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வது கண்டறியப்பட்டது. மேலும், கட்டண அறிவிப்பு பலகையை பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்காமல் மூடி வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
குத்தகைதாரரான ஆர்.சுப்ரமணிக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பரிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது, நான்கு சக்கர வாகனத்திற்கு 6 மணி நேரத்திற்கு ரூ.10 வசூல் செய்யாமல் கூடுதலாக ரூ.20-யினை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வது கண்டறியப்பட்டது. மேலும், கட்டண அறிவிப்பு பலகையை பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்காமல் மூடி வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
குத்தகைதாரரான ஆர்.சுப்ரமணிக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பரிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.