வாகனம் நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலித்தமைக்காக குத்தைகைதாரர்கள் மீது அபராதம்- மாநகராட்சி அதிரடி

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம் வார்டு எண்- 83-ல் ராஜ வீதி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலித்தமைக்காக உதவி ஆணையர் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, நான்கு சக்கர வாகனத்திற்கு 6 மணி நேரத்திற்கு ரூ.10 வசூல் செய்யாமல் கூடுதலாக ரூ.20-யினை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வது கண்டறியப்பட்டது. மேலும், கட்டண அறிவிப்பு பலகையை பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்காமல் மூடி வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

குத்தகைதாரரான ஆர்.சுப்ரமணிக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அபராதமாக ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பரிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...