கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். அவ்வப்போது சாலை மறியல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் இன்று மாலை உழவர் சந்தை அருகே, முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, சிங்காநல்லூர், குறிச்சி, பீளமேடு, சரவணம்பட்டி மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி போன்ற பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவது இல்லை. 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு கோவை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.
20 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில், மக்களின் எதிர்காலத்தேவைகளை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்கள் கொண்டுவராமலிருக்கிறது ஆளும் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் இன்று மாலை உழவர் சந்தை அருகே, முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, சிங்காநல்லூர், குறிச்சி, பீளமேடு, சரவணம்பட்டி மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி போன்ற பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவது இல்லை. 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு கோவை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.
20 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில், மக்களின் எதிர்காலத்தேவைகளை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்கள் கொண்டுவராமலிருக்கிறது ஆளும் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.