கோவையில் மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் கைது



கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் புதூரில் ஸ்ரீ முருகன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஒரு சித்த மருத்துவமனை இயங்கி வந்தது. இங்கு மருத்துவம் பயிலாமல் ஒரு பெண்மணி நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, லதா (63) என்ற பெண் சித்த மருத்துவம் டிப்ளமோ பயின்று விட்டு, ஆங்கில மருத்துவ வழியில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் இருந்த ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோமங்கலம் காவல்துறையினர் லதாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...