தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் (TNSand) மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங்களை சரிபார்தலுக்கான சிறப்பு முகாம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 7.8.2017 முதல் 11.8.2017 வரை காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை வட்டார போக்குவரத்து அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இந்த நாட்களில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் பழைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வாகன உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தின் நடப்பில் உள்ள அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் படிவத்துடன் முகாமிற்கு வரவேண்டும். பதிவேற்றிய ஆவணங்களுக்கான அசல் சான்றுகளை அவற்றுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. இம்முகாமிற்கு வாகனங்களை கொண்டு வர வேண்டாம். மேலும், தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவும் தெரிவிதுக்கொள்ளபடுகிறது.
வாகன உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தின் நடப்பில் உள்ள அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் படிவத்துடன் முகாமிற்கு வரவேண்டும். பதிவேற்றிய ஆவணங்களுக்கான அசல் சான்றுகளை அவற்றுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. இம்முகாமிற்கு வாகனங்களை கொண்டு வர வேண்டாம். மேலும், தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவும் தெரிவிதுக்கொள்ளபடுகிறது.