நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சிக்குட்பட்ட உல்லத்தி, எப்பநாடு (ம) அஜ்ஜுர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாமில், 81 பயனாளிகளுக்கு, கழிப்பறை கட்ட ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டிலான காசோலைகளை வழங்கினார்.
உதகை ஊராட்சிக்குட்பட்ட உல்லத்தி, எப்பநாடு (ம) அஜ்ஜுர் பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாமில், 61 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைக் கட்ட ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினையும், 20 தனிநபர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் வழங்கினார்.
காசோலைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “இத்தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வின் நோக்கமே, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக, நீலகிரி மாவட்டத்தினை உருவாக்குதல்தான். ஏனெனில் திறந்த வெளியில் மலம் கழித்தால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோயாக நம்மையும், நம் சமூகத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
எனவே அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி தனிநபர் இல்லக்கழிப்பிடத்தினை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
முன்னதாக, உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர்மலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து பணிகளை முடித்து பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
எப்பநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கடையிலுள்ள பொருட்களின் இருப்பினையும், தரத்தினையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மகளிர் மேம்பாட்டுத்திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உதகை ஊராட்சிக்குட்பட்ட உல்லத்தி, எப்பநாடு (ம) அஜ்ஜுர் பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு முகாமில், 61 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறைக் கட்ட ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினையும், 20 தனிநபர்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் வழங்கினார்.
காசோலைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “இத்தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வின் நோக்கமே, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக, நீலகிரி மாவட்டத்தினை உருவாக்குதல்தான். ஏனெனில் திறந்த வெளியில் மலம் கழித்தால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல், தொற்றுநோயாக நம்மையும், நம் சமூகத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
எனவே அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கி தனிநபர் இல்லக்கழிப்பிடத்தினை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
முன்னதாக, உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர்மலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விரைந்து பணிகளை முடித்து பயனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
எப்பநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கடையிலுள்ள பொருட்களின் இருப்பினையும், தரத்தினையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மகளிர் மேம்பாட்டுத்திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.