சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் பாதிக்காதவகையில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பாரம்பரியமான வழக்கப்படி சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு விநாயகர் சதூர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தியின் போது வழக்கமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயார் செய்வதை தவிர்க்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இராசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிக்க வேண்டும்.

இரசாயண வர்ணம் (பெயின்ட்) பூசி விநாயகர் சிலைகளை தயாரிப்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். மேற்சொன்ன விதிமுறைகளை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் இரசாயன வர்ணம் பூசி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த தடை விதிக்கப்படும். 

எனவே, விநாயகர் சதூர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுசூழல் மற்றும் நீர்நிலைகளை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...