பட்டாசு கடைக்கான உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு


தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 

பட்டாசுக்கடைக்கான உரிமம் பெற கடந்த ஜீலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். 

இந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விருப்பமுடையவர்கள் மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால், மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால், பட்டாசுக்கடை அமைப்பதர்கான உரிமம் பெற வரும் 11-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக  போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது :- 

வரும் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை பட்டாசுக்கடை அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலக்கப்பட்டு, காவல்துறையின் ஆய்வுக்கு பிறகே உரிமம் வழங்கப்படும். 

வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி, சாலையோரங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...