நதிகளை மீட்கக்கோரி பள்ளி மாணவர்களின் வித்தியாசமான பிரச்சாரம்- சாலையில் 6 கிலோ மீட்டர் நீள ரங்கோலி


நம் தேசத்தின் உயிர்நாடியான நதிகளை காக்கும் விதமாக 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்’ என்னும் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி உள்ளது.



இதற்கு நாடெங்கும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் கோவை சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று (இன்று) 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரங்கோலிவரைந்தனர்.

இந்த ரங்கோலி சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளியில் துவங்கி தேவராயபுரம் கிராமம் வரை சாலையின் இருபுறமும் அமைந்தது. இதில் 8 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  



நதிகளை காக்கும் இம்முயற்சியில் ஆர்வமுள்ள இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களை வீடு வீடாக சென்று சந்தித்து, அழிந்து வரும் நம் நதிகளை பற்றியும் அவற்றை மீட்கும் இப்பேரணி பற்றியும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்:-

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பெருக்கெடுத்து ஓடிய நம் நதிகள் இப்போது வற்றிவருகின்றன. ஜீவநதிகளாக கருதப்படும் கங்கை, காவேரி முதலான அணைத்து நதிகளும் வற்றி வருகின்றன. இந்நிலை நீடித்தால் பெரும்  நீர் பற்றாக்குறையை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இந்நிலையை மாற்றி நம் தேசத்து நதிகளை மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்ய அரசு நடவடிக்கையைக் கோரி 'நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்னும் விழிப்புணர்வுப் பேரணி நிகழவுள்ளது.



வரும் செப்டம்பர் 3ம் தேதி கோவையில் துவங்க உள்ள இப்பேரணி அக்டோபர் 2ம் தேதி புதுடில்லியில் நிறைவுறும். குமரி முதல் இமயம் வரை செல்லும் இந்த பேரணி மூலம் 16 மாநிலங்களில் உள்ள 22 நகரங்களில் பிரச்சாரம் செய்யும் மாபெரும் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதில் 16 மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.



இந்த நிகழ்ச்சிகளின் போது நதிகளின் ஓட்டப்பெருக்கை அதிகரிக்கச் செய்திட பல்துறை வல்லுனர்களால் நுட்பமாக உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்ட அறிக்கை ஒவ்வொரு முதல்வரிடமும் தில்லியில் பிரதமரிடமும் அளிக்கப்படும். 

இந்த திட்டம் பற்றிய விளக்கங்களை rallyforrivers.org என்ற இணையதளத்தில் பெற முடியும்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...