கோவை கருமத்தம்பட்டியை அடுத்த வாய்க்கால்பளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (63), இவரது மனைவி சுந்தராம்மாள் (58). இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், குமாரசாமி, சுந்தராம்மாள் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் விசைத்தறி நடத்தி வசித்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குமாரசாமி மற்றும் அவரது மனைவி உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், நேற்று காலை குமாரசாமியை தேடி அவரது உறவினர்கள் பண்ணை வீட்டிற்கு சென்றனர். அப்போது குமாரசாமியும், சுந்தராம்மாளும் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குமாரசாமிக்கு சொந்தமான விசைத்தறியில் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், குமாரசாமி தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இதை பார்த்த சுந்தரம்மாளையும் படுகொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, இந்த இரட்டைக்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி பெருமாள் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 11-ம் தேதிவரை பெருமாளை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பெருமாள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக குமாரசாமி மற்றும் அவரது மனைவி உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், நேற்று காலை குமாரசாமியை தேடி அவரது உறவினர்கள் பண்ணை வீட்டிற்கு சென்றனர். அப்போது குமாரசாமியும், சுந்தராம்மாளும் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குமாரசாமிக்கு சொந்தமான விசைத்தறியில் பணிபுரிந்த ஈரோட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், குமாரசாமி தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும், இதை பார்த்த சுந்தரம்மாளையும் படுகொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போனை எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, இந்த இரட்டைக்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி பெருமாள் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 11-ம் தேதிவரை பெருமாளை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பெருமாள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.