கோவை மாநகராட்சியில் பருவ மழை காலத்தினையொட்டி பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைப்பு செய்ய மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியில் பருவ மழை பெய்ய உள்ள சூழ்நிலையில், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்துவதற்காக கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகவளாகங்கள், தொழிற்கூடங்கள், பூங்காக்கள், ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரித்து குப்பைகளை சேராவண்ணம், அவ்வப்போது புனரமைப்பு செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்யும் போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்கள் தெரிய வரும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.