நிதீஷ்குமார், பாஜக இடையேயான புதிய கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு எதிரானது வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் குற்றச்சாட்டு

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், பாஜக இடையே ஏற்பட்டுள்ள புதிய கூட்டணியை வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கடுமையாக விமர்ச்சித்துள்ளது. புதிய அரசு உருவாக்கம் மக்களின் தீர்ப்பிற்கும் அரசியல் விழுமங்களுக்கும் எதிரானதாகும் என வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் SQR இல்யாஸ் அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மக்களின் தீர்ப்பிற்கு நிதீஷ்-மோடி கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

"சங்பரிவார் சித்தாந்தங்களுக்கு எதிரான, வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில்தான் பீகாரில் ஆர்ஜெடி- ஜெடியூ- காங்கிரஸ் மகா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். இவ்வெற்றியானது நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளுக்கு நம்பிக்கை ஊட்டியது. இந்த புனிதமற்ற கூட்டணியை உருவாக்குவதற்கு முன்பாக குறைந்த பட்சம் அவர் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமாவது கருத்து கேட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு முன்னால் நிதீஷ்குமார் எவ்வித கொள்கைகளோ விழுமங்களோ இல்லாத நபர்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார். 

லாலுவிற்கும் அவரது மகன் தேஜஸ்விற்கும் எதிராக எழுந்த ஊழல் ஓலங்கள் எல்லாம் அரசியல் நாடகத்தின் ஒரு பகுதிதான் என்பது புகை மறைவின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் பதவி அரசியல் மேடையில் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் மட்டும்தான் என்பதை பாட்னாவில் நடந்தேறிய சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. பீகாரின் ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கண்ணியத்தையை களங்கப்படுத்தியுள்ளார்." என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், புதிய கூட்டணியை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் முனைவர் SQR இல்யாஸ் தனது அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...