நிதீஷ்குமார், பாஜக இடையேயான புதிய கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு எதிரானது வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் குற்றச்சாட்டு

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், பாஜக இடையே ஏற்பட்டுள்ள புதிய கூட்டணியை வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கடுமையாக விமர்ச்சித்துள்ளது. புதிய அரசு உருவாக்கம் மக்களின் தீர்ப்பிற்கும் அரசியல் விழுமங்களுக்கும் எதிரானதாகும் என வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் SQR இல்யாஸ் அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மக்களின் தீர்ப்பிற்கு நிதீஷ்-மோடி கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

"சங்பரிவார் சித்தாந்தங்களுக்கு எதிரான, வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில்தான் பீகாரில் ஆர்ஜெடி- ஜெடியூ- காங்கிரஸ் மகா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். இவ்வெற்றியானது நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளுக்கு நம்பிக்கை ஊட்டியது. இந்த புனிதமற்ற கூட்டணியை உருவாக்குவதற்கு முன்பாக குறைந்த பட்சம் அவர் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமாவது கருத்து கேட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு முன்னால் நிதீஷ்குமார் எவ்வித கொள்கைகளோ விழுமங்களோ இல்லாத நபர்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார். 

லாலுவிற்கும் அவரது மகன் தேஜஸ்விற்கும் எதிராக எழுந்த ஊழல் ஓலங்கள் எல்லாம் அரசியல் நாடகத்தின் ஒரு பகுதிதான் என்பது புகை மறைவின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் பதவி அரசியல் மேடையில் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் மட்டும்தான் என்பதை பாட்னாவில் நடந்தேறிய சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. பீகாரின் ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கண்ணியத்தையை களங்கப்படுத்தியுள்ளார்." என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், புதிய கூட்டணியை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் முனைவர் SQR இல்யாஸ் தனது அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...