தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல இயக்கதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்காக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் நகர நல மருத்துவ அலுவலர் கே. சந்தோஷ்குமார் டெங்கு காய்ச்சல் பற்றியும், கொசுக்களால் வியாதி பரவுதலைப்பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
கோவை மாநகர சுகாதார அலுவலர் கே.வி. திருமால் மற்றும் சுகாதார ஆய்வாளர் கே.ராதாகிருஷ்ணன் டெங்கு உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும், கொசு உற்பத்தி மையங்களை தடுப்பது பற்றியும் செயல்முறை காட்சிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.
மேலும், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பற்றிய அறிவுரைகளை வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.
டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் சுகாதார அலுவலர் மருதாசலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் நகர நல மருத்துவ அலுவலர் கே. சந்தோஷ்குமார் டெங்கு காய்ச்சல் பற்றியும், கொசுக்களால் வியாதி பரவுதலைப்பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார்.
கோவை மாநகர சுகாதார அலுவலர் கே.வி. திருமால் மற்றும் சுகாதார ஆய்வாளர் கே.ராதாகிருஷ்ணன் டெங்கு உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும், கொசு உற்பத்தி மையங்களை தடுப்பது பற்றியும் செயல்முறை காட்சிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.
மேலும், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பற்றிய அறிவுரைகளை வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.
டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் சுகாதார அலுவலர் மருதாசலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.