நீலகிரியில் எம்ஜிஅர் நூற்றாண்டு விழா குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான கூட்டம் கடந்த ஜூலை 17ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 104 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.



பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 



இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் குன்னூர் டைகர்ஹில் பகுதியை சேர்ந்த வி.கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு ரூ.2,25,000 மானியத்துடன் ரூ.8,75,060 மதிப்பிலான டூரிஸ்ட் வாகனத்தையும், திருநங்கைகளுக்கு சுயதொழில் துவங்க 1 பயனாளிக்கு ரூ.20,000 வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.1,20,000 நிதியுதவியும் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்கமும், ரூ.50,000 நிதியுதவியும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், உதவி ஆணையர் (கலால்) முருகன், தனித்துணை ஆட்சியர் மனுக்கள் கார்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...