கோவை, சிஐடி காலனி சுந்தரம் வீதியில் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

சென்னை நீதிமன்ற உத்தரவின்படி வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை தாமஸ் வீதியில் மதுக்கடை (எண் 1711) கோவிலுக்கு அருகாமையில் செயல்பட்டு வருகிறது.
கோவை டி.கே.மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இதன் அருகிலேயே புதிய மதுக்கடை திறந்திருப்பது அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இப்பகுதி குடியிருப்புவாசிகளின் நலன்கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

சென்னை நீதிமன்ற உத்தரவின்படி வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை தாமஸ் வீதியில் மதுக்கடை (எண் 1711) கோவிலுக்கு அருகாமையில் செயல்பட்டு வருகிறது.
கோவை டி.கே.மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இதன் அருகிலேயே புதிய மதுக்கடை திறந்திருப்பது அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இப்பகுதி குடியிருப்புவாசிகளின் நலன்கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.