கோவை மாவட்டம், காந்திபார்க் பகுதியில் சாடையடித்து வாழ்க்கை நடத்தும் மக்கள் ஃப்ளாட் பாரங்களில் தங்கியுள்ளனர்.
கைக்குழந்தைகள், பள்ளி சிறார்களுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ள இம்மக்கள் தங்களுக்கென ஒரு வீடு அல்லது இடம் வேண்டும், குழந்தைகள் மேற்படிப்பை தொடர சாதிச்சான்றிதழ் வேண்டும் என நீண்டகாலமாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் குறைதீர் கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை மனுக்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று (ஜூலை 23) இம்மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இவர்களின் உடமைகளை அப்புறப்படுத்தி உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுமாறு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காந்திபார்க் ஃப்ளாட் பாரத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் உடலை சாட்டையால் அடித்தும், கத்தியால் கைகளை காயம் செய்தும் தங்களது வலிகள் நிறைந்த கோரிக்கையினை ஆட்சியர் அலுவலகத்தில் வெளிப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தங்களது மக்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
கைக்குழந்தைகள், பள்ளி சிறார்களுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ள இம்மக்கள் தங்களுக்கென ஒரு வீடு அல்லது இடம் வேண்டும், குழந்தைகள் மேற்படிப்பை தொடர சாதிச்சான்றிதழ் வேண்டும் என நீண்டகாலமாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் குறைதீர் கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை மனுக்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று (ஜூலை 23) இம்மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இவர்களின் உடமைகளை அப்புறப்படுத்தி உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுமாறு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காந்திபார்க் ஃப்ளாட் பாரத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் உடலை சாட்டையால் அடித்தும், கத்தியால் கைகளை காயம் செய்தும் தங்களது வலிகள் நிறைந்த கோரிக்கையினை ஆட்சியர் அலுவலகத்தில் வெளிப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தங்களது மக்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.