காவல்துறையினரின் வஞ்சிப்பில் இருந்து பாதுகாக்கக் கோரி சாலையோரம் வசிப்போர் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், காந்திபார்க் பகுதியில் சாடையடித்து வாழ்க்கை நடத்தும் மக்கள் ஃப்ளாட் பாரங்களில் தங்கியுள்ளனர். 

கைக்குழந்தைகள், பள்ளி சிறார்களுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக உள்ள இம்மக்கள் தங்களுக்கென ஒரு வீடு அல்லது இடம் வேண்டும், குழந்தைகள் மேற்படிப்பை தொடர சாதிச்சான்றிதழ் வேண்டும் என நீண்டகாலமாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் குறைதீர் கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை மனுக்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று (ஜூலை 23) இம்மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இவர்களின் உடமைகளை அப்புறப்படுத்தி உடனடியாக வேறு பகுதிக்கு செல்லுமாறு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனைத்தொடர்ந்து, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காந்திபார்க் ஃப்ளாட் பாரத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் உடலை சாட்டையால் அடித்தும், கத்தியால் கைகளை காயம் செய்தும் தங்களது வலிகள் நிறைந்த கோரிக்கையினை ஆட்சியர் அலுவலகத்தில் வெளிப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தங்களது மக்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...