கதிராமங்கலம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று கோவை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மாணவி வளர்மதியை உடனடியாக விடுவிக்கவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...