நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று கோவை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மாணவி வளர்மதியை உடனடியாக விடுவிக்கவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பகுதிகளில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று கோவை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், விவசாயிகளின் உரிமைக்காக போராட்டம் நடத்திய மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மாணவி வளர்மதியை உடனடியாக விடுவிக்கவில்லை எனில் அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.