டெங்குவால் தொடரும் உயிர் பலி: திருப்பூரைச் சேர்ந்த சிறுவன் மரணம்


கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக் கூடிய இந்த காய்ச்சல் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், டெங்குவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (10). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை. தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் இரத்த மாதிரிகளை எடுத்த மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரவீனுக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து தனி வார்டில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதியன்று பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இந்த மரணத்திற்கு காரணம் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...