ஆம்புலன்சுகளுக்கு வழி விடும் சிக்னல்: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் இயந்திரம்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளிலும், சிக்னல்களிலும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் முன்னேறி செல்ல வழியின்றி விழி பிதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க தற்போது போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

கோவை மாநகரில் உள்ள 55 சிக்னல்களில் 15 சிக்னல்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் வரும்போது, அவை தொடர்ந்து முன்னே செல்ல சிக்னல்கள் இடையூறாக இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம் போக்குவரத்து போலீசார் அமரும் குடையின் கீழ் பொருத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் வரும் வழியினை அறியும் போலீசார் உடனடியாக குறிப்பிட்ட வழிக்கான இடத்தை அழுத்தி அந்த சிக்னலில் பச்சை விளக்கு எரிய செய்யலாம். இதனால், அவசர ஊர்திகள் விரைவாக செல்ல வழி வகை உருவாகியுள்ளது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...