கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளிலும், சிக்னல்களிலும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் முன்னேறி செல்ல வழியின்றி விழி பிதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க தற்போது போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் உள்ள 55 சிக்னல்களில் 15 சிக்னல்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் வரும்போது, அவை தொடர்ந்து முன்னே செல்ல சிக்னல்கள் இடையூறாக இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம் போக்குவரத்து போலீசார் அமரும் குடையின் கீழ் பொருத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் வரும் வழியினை அறியும் போலீசார் உடனடியாக குறிப்பிட்ட வழிக்கான இடத்தை அழுத்தி அந்த சிக்னலில் பச்சை விளக்கு எரிய செய்யலாம். இதனால், அவசர ஊர்திகள் விரைவாக செல்ல வழி வகை உருவாகியுள்ளது.
இதனை தடுக்க தற்போது போக்குவரத்து சிக்னல்களில் தானியங்கி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் உள்ள 55 சிக்னல்களில் 15 சிக்னல்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு, ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனங்கள் வரும்போது, அவை தொடர்ந்து முன்னே செல்ல சிக்னல்கள் இடையூறாக இருந்தன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரம் போக்குவரத்து போலீசார் அமரும் குடையின் கீழ் பொருத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் வரும் வழியினை அறியும் போலீசார் உடனடியாக குறிப்பிட்ட வழிக்கான இடத்தை அழுத்தி அந்த சிக்னலில் பச்சை விளக்கு எரிய செய்யலாம். இதனால், அவசர ஊர்திகள் விரைவாக செல்ல வழி வகை உருவாகியுள்ளது.