கோவை காந்திபுரத்தை அடுத்த ராம்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கம் செயல்பட்டுவருகிறது.
நேற்று மாலை திரையரங்கத்திற்கு மானமதுரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (22), சந்தோஷ் குமார் (25) ஆகிய இருவர் படம் பார்க்க சென்றனர்.
இந்நிலையில், குடிபோதையில் இருந்த இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு வேறு இருக்கையில் அமர்ந்ததுடன் திரையரங்கிற்குள் படம் பார்ப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் இருவரும் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திரையரங்கின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு ஓடினர்.
இது குறித்து திரையரங்கு நிர்வாகம் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை திரையரங்கத்திற்கு மானமதுரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (22), சந்தோஷ் குமார் (25) ஆகிய இருவர் படம் பார்க்க சென்றனர்.
இந்நிலையில், குடிபோதையில் இருந்த இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு வேறு இருக்கையில் அமர்ந்ததுடன் திரையரங்கிற்குள் படம் பார்ப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் இருவரும் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திரையரங்கின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு ஓடினர்.
இது குறித்து திரையரங்கு நிர்வாகம் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.