கோவையில் திரையரங்கம் மீது கல்வீச்சு: இருவர் கைது

கோவை காந்திபுரத்தை அடுத்த ராம்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திரையரங்கம் செயல்பட்டுவருகிறது.

நேற்று மாலை திரையரங்கத்திற்கு மானமதுரை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (22), சந்தோஷ் குமார் (25) ஆகிய இருவர் படம் பார்க்க சென்றனர்.

இந்நிலையில், குடிபோதையில் இருந்த இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுவிட்டு வேறு இருக்கையில் அமர்ந்ததுடன் திரையரங்கிற்குள் படம் பார்ப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, அவர்கள் இருவரும் திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் திரையரங்கின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி விட்டு ஓடினர். 

இது குறித்து திரையரங்கு நிர்வாகம் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...