பெண்குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்த தந்தை அரசு மருத்துவமனையில் தற்கொலை

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஆண் குழந்தையும், 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவரது மனைவி கடந்த ஜூலை 12ம் தேதியன்று 3-வது பிரசவதிற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பணப் பிரச்சனையால் மன உளச்சலில் இருந்த ரமேஷ் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ப்தியடைந்து இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அங்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...