தமிழ்நாட்டில் விளைநிலங்களை விட்டு வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சீமான் பேச்சு

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. இந்நிலையில், ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்கு திராணியற்ற அரசாக மாநில அரசு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.



காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடகோவை மேம்பால பூங்காவில் உள்ள பெருந்தமிழர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.



இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

அரசியல் வரலாற்றில் தூய தலைவராக இருந்தவர் காமராசர் அவர்கள். அவருடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடம் திறந்தவர். ஆனால், இன்று தெருவிற்கு தெருவில் மதுக்கடை அதிக அளவில் திறக்கப்படுகிறது. அவர் இல்லையென்றால் இன்று கல்வியறிவு பெற்ற சமுதாயமாக இருந்திருக்க முடியாது. உண்மை, நேர்மை, எளிமை போன்றவற்றை அவரது பெரும் சொத்தாக வைத்து வாழ்ந்து வந்தார். இன்றைய பிள்ளைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வழித்தடம் காட்டித்தந்தவர். 

அவரது ஆட்சியை போலவே நடத்தவேண்டும் என்று சொல்பவர்கள் இன்று ஊழல் செய்து வருகின்றனர். அவர்கள் இதுபோன்று பேசுவதே அர்த்தமற்றது ஆகும். காமராசர் எந்த வழியில் பயணித்தாரோ அந்த வழியில் நாங்கள் பயணிக்க இந்நாளில் உறுதிமொழி ஏற்கின்றோம்' என்றார்.



மேலும், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்து சீமான் பேசுகையில், தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்தியா நட்பு நாடு என்று கூறுகிறார்கள் ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களை இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் என இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தண்டிக்கின்றனர்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி மத்திய அரசு கவலை கொள்வதில்லை. இதை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. விளைநிலங்களை விட்டு இன்று வேளாண்குடிமக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியா அதிக அளவில் வளங்கள் உள்ள நாடு. ஹட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றின் மூலம் விவசாய நிலங்களை பறித்து மக்களை வெளியேற்றி வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. இதை கேட்பதற்க்கு மாநில அரசிற்கு திராணியில்லை. எங்களிடம் அதிகாரம் இருந்திருந்தால் காவேரி வேளாண்மை வாரியம் உரிய நேரத்தில் அமைத்திருப்போம். 

மதுக்கடையை தடை செய்ய வழக்கு தொடர்ந்தால், அது அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது என்கின்றனர். நீதியின் பக்கம் மக்களுக்கு அநீதி நடக்கிறது' என்றார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...