மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை: உழவே தலை கருத்தரங்கில் கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் 'அக்ரி இன்டெக் 2017' என்ற வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் பகுதியாக 'உழவே தலை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் கொடிசியா ஒருங்கிணைத்த இந்த கருத்தரங்கில் பாரதிய வித்யா பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், இயற்கை விவசாய அறிஞர்கள் 16 பேர் கலந்து கொண்டு கருத்தரங்கை நடத்தினர். 



முன்னதாக கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:- 

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் நாம் நிறைய சாதித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அனைத்து வளங்களும் நம்மிடம் இருந்தும் இந்த தொய்வுக்கு காரணம் மக்களின் பங்களிப்பு இல்லாமல் போனதே காரணம். இவ்வளவு பெரிய தேசத்தை ஒரு அரசியல் கட்சியோ அல்லது முதல் அமைச்சரோ மட்டும் கவனித்துக் கொள்ள முடியாது. 

மக்கள் ஆக்கப்பூர்வமாக செயல் பட்டு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை சதவிகிதம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் மீதான மக்களின் அலட்சியம் மற்றும் அறியாமை நீங்கும் போது தான் பின்னடைவு நீங்கும். உழவே தலை என்ற இந்த கருத்தரங்கிற்கு அதிகமான இளைஞர்கள் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிரச்சனைகள் மீது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது. ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை. இயற்கையை கெடுப்பது, விவசாயத்தை புறக்கணிப்பது விவசாயத்தின் மீது எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவைகள் தவிர்க்கப்பட்டு, இளைஞர்களை விவசாயத்திற்குள் புகுத்திட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். 



இக்கருத்தரங்கில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன், சித்த மருத்துவர் சிவராம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...