கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதிநகர் பகுதி சாலையினை உக்கடம் சாலையுடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, தற்போது அதற்கான திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின்படி பல்வேறு ஆக்கிரமிப்பில் உள்ள சாலையினை 60 அடி அகல சாலையாக மாற்ற தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும், உயர் நீதிமன்றத்தில் இந்த சாலையினை 100 அடி சாலையாக அமைக்க வேண்டுமென்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கோவை மாநகராட்சி இதற்கான சாலையின் அளவைக் குறைத்து பணிகளை துவங்கியுள்ளது.

மாநகராட்சி இந்த சாலையினை 80 அடி சாலையாக அகலப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.