மக்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கோவை- பொள்ளாச்சி பயணிகள் ரயில் சேவை இன்று (ஜூலை 15) துவக்கப்பட உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கோவை - பொள்ளாச்சி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கப்பட்டது. சுமார் 8 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. ஆனால், ரயில் போக்குவரத்து சேவை துவங்குவதற்கான தேதி குறிப்பிடப்படாமல் காலம் கடந்துவந்தது.
இந்நிலையில் இன்று கோவையில் இருந்து மதியம் 1.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு ரயில் (ரயில் எண்- 06081) புறப்படுகிறது. இந்த ரயில் பொள்ளாச்சிக்கு 2.40-க்கு சென்றடையும். தொடர்ந்து மாலை 3.15 மணியளவில் (ரயில் எண்- 06082) புறப்பட்டு கோவைக்கு 4.30 மணிக்கு வந்தடையும்.
இதன் துவக்க விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கட்டுமான தலைமை பொறியாளர், உதவி தலைமை பொறியாளர் உட்பட பலர்கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று கோவையில் இருந்து மதியம் 1.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு ரயில் (ரயில் எண்- 06081) புறப்படுகிறது. இந்த ரயில் பொள்ளாச்சிக்கு 2.40-க்கு சென்றடையும். தொடர்ந்து மாலை 3.15 மணியளவில் (ரயில் எண்- 06082) புறப்பட்டு கோவைக்கு 4.30 மணிக்கு வந்தடையும்.
இதன் துவக்க விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கட்டுமான தலைமை பொறியாளர், உதவி தலைமை பொறியாளர் உட்பட பலர்கலந்து கொள்கின்றனர்.