டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மேற்படி காய்ச்சல் பாதிப்பினை தடுத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பூரண ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பினை முழுமையாக ஒழிக்க முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதில், மக்கள் தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காவண்ணம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் கொசுக்கள் உற்பத்தி செய்திட ஏதுவாக உள்ள டயர்கள், உரல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் தொட்டிகள், உபயோகமற்ற பொருட்கள், பேப்பர் கப்கள் போன்ற பொருட்களை உடன் நீர் தேங்காச்செய்யாமல் செய்வதுடன் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டினை தூய்மையாக வைத்திடல் வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் குடிநீரை சுத்தப்படுத்தி மூடி கொசு புகாதவாறு வைக்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் நீர் தேங்கி இருப்பதை உடனுக்குடன் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு ஆய்வு செய்ய வரும்போது உடனிருந்து போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு அரம்ப சுகாதார நிலையம் மற்றும் தலைமை அரசுமருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்.

மாடிகளில் சின்டெக்ஸ் பயன்படுத்தும் வீடுகளில் தொட்டிகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து நீர் நிரம்பி வெளியேறும் குழாய்களிலும் ஏர் வால்வுகளிலும் கொசுக்கள் உள்ளே புகாதவாறு கொசுவலை துண்டினை கட்டப்படல் வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...