தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொசுவினால் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை முற்றிலுமாக தடுத்து காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், பொது மக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கொசுவினால் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை முற்றிலுமாக தடுத்து காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், பொது மக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.