பல்வேறு வடிவங்களில் படாதபாடுபடுத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகள்..!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதில், கோவையில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.



அதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கடைகளை நிறுவியது டாஸ்மாக் நிர்வாகம். இதற்காக, மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டும் அடக்குமுறை தலையோங்கி குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் காலூன்றின.

இதனிடையே, பல பகுதிகளில் முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்து வருவது அன்றாட செய்தியாகி வருகிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கோவை மதுக்கரை பகுதியில் இதுபோன்று முறைகேடாக நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் பின்புற வாசல் வழியாக மதுபானங்களை விற்பதும், அந்தப் பகுதியில் பல தனிமனிதர்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்துவருவதும் நமது சிம்ப்ளிசிட்டி வாயிலாக செய்தி வெளியானது. அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் குடியிருப்பும், போக்குவரத்து நெரிசலும் நிறைந்த சாய்பாபா காலனி பகுதியிலும் இதுபோன்ற முறையற்ற மதுபானம் விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.



சாய்பாபா காலனி, என்எஸ்ஆர் சாலை அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அண்ணப்பூர்ணா பேருந்து நிறுத்தம், என்எஸ்ஆர் சாலையில் செயல்பட்டு வரும் இந்தக் கடைக்கு மாலை நேரத்தில் அதிகளவிலான குடிமகன்கள் படையெடுத்து வருவதால் அந்த சாலையினை பெண்கள், பள்ளி குழந்தைகள் பயன்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கடையினை அகற்றி, சாய்பாபா காலனி பகுதியில் முறையற்று நடைபெற்று வரும் மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...