கோவை மாவட்டத்தில் சமூக ஆர்வலராக செயல்பட்டு வரும் பிரபாகரன் இன்று பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடையை மீறி விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக அந்த பொருள்களை கடையினில் வாங்கிக் கொண்டு மனு கொடுக்க வந்திருந்தார்.
அப்போது, அந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை வைத்திருந்ததாகவும் கூறி அங்கிருந்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின் அவரை விடுதலை செய்தனர்.
அப்போது, அந்த போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை வைத்திருந்ததாகவும் கூறி அங்கிருந்த காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பின் அவரை விடுதலை செய்தனர்.