கோவை தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (35). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு பேருந்து பணிமனையில், பேருந்துகளை சுத்தப்படுத்தும் பணி செய்து வந்தார். இந்த நிலையில், வழக்கம் போல நேற்று இரவு பணிக்கு சென்ற குமார் பணிமனையில் நிறுத்தி வைத்திருக்கும் பேருந்துகளை சுத்தம் செய்து வந்தார். இன்று அதிகாலை பேருந்து ஒன்றின் பின்புற கண்ணாடியை துடைத்துக்கொண்டிருந்தார்.
இதை அறியாத பேருந்தின் ஓட்டுநர் ஏசுகுமார் (39) பேருந்தை பின்புறமாக இயக்கினார். இதனால், பேருந்தின் பின்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்த குமார், உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை அறியாத பேருந்தின் ஓட்டுநர் ஏசுகுமார் (39) பேருந்தை பின்புறமாக இயக்கினார். இதனால், பேருந்தின் பின்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்த குமார், உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று குமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.