பெண்களுக்கு சமமான மரியாதையை வழங்க வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் நீதிபதி குரியன் ஜோசப் பேச்சு


கோவை, ஆலந்துறையை அடுத்துள்ள காருண்யா பல்கலைக்கழகத்தின் இன்று 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பெண்களுக்கு சமமான உரிமையும், மரியாதையும் வழங்கப்பட்டால் மட்டுமே சீரான சமுதாயம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுகையில், இளைஞர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், அனைவரையும் சகோதரர்களாக மதிப்பதுடன் இயற்கை வளங்களை காப்பற்றுவதில் கவனம் கொள்ள வேண்டும் என்றார். நமது முன்னோர்களை விட தற்போதைய சமுதாயத்தினருக்கு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அதனை முழுமையாக இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தவறுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளுதல் அவசியம் என்றார்.

மேலும், நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனம் மற்றும் அதன் சட்டத்தையும் இளைய சமுதாயம் முழுமையாக கற்றுக்கொள்வதுடன், அதனை சமுதாய மேம்பாட்டிற்கு செயல்படுத்தவும் முன்வர வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் மனித வளமும், தரமும் அதிகரித்து வருவதால் தேடுதல் மூலம் விடா முயற்சியால் வெற்றிப்பெற இளைய சமுதாயத்தினர் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார். இந்திய சாசனம் வழங்கியுள்ள சம உரிமை, பேச்சுரிமை, வாழும் உரிமை பங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவர்களுக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். 

பின்னர், பல்கலையில் பட்டம் பயின்ற 1886 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், துனை வேந்தர் ஜேம்ஸ் மற்றும் அறங்காவலர் ஸ்டெல்லா தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...