திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை துவக்கம்

கோவை திமுக சார்பில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி பட்டறை கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற நியமனக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர் பாரதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சி எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க நேரிடலாம் எனக் கூறினார். மேலும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அஇஅதிமுக ஆட்சியை பாரத ஜனதா கட்சி கட்டுபாட்டுடன் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டயுள்ளார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கொடநாட்டில் நடைபெற்ற சம்பவங்களை மறைப்பதற்காக பாரத ஜனதா கட்சி தமிழகத்தில் டி.ஜி.பி ராஜேந்திரனை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு எதிராக திமுக சார்பில் உயர்தீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி, கோவை மாநகர வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...