கோவை, செல்வபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தங்க நகை தொழிலாளி பிரவீன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டின் கதவு உடைக்கபட்டு இருப்பதைக் கண்டு அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பிரவீணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையதிற்க்கு தொலைபேசி மூலமாக பிரவீன் தகவல் அளித்தார். அப்போது அவர் தனது வீட்டில் 10 பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும், மேலும் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது எனவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். மேலும் தான் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.