கோவைப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மரம் நடு விழாவும், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியும் நடத்தப் பெற்றன. மரம் நடுதல் வாரத்தின் இறுதி நாளினை முன்னிட்டுக் கல்லூரியின் மைதானத்தைச் சுற்றிலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் களப் பணியாளர்கள் மரம் நடுதலைத் தொடங்கினர்.
இதனை முன்னிட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறையும் நாட்டுநலப்பணித் திட்டமும் இணைந்து ‘வனதேவதை’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தியது. போட்டியில் மிகுதியான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் வி.இராதிகா மரம் நடுதலைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் க.பாலாஜி மரம் நடுதலிலும் இலக்கியப் போட்டியிலும் கலந்து கொண்டவர்களைச் சிறப்பித்து நன்றியுரை வழங்கினார்.
இதனை முன்னிட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறையும் நாட்டுநலப்பணித் திட்டமும் இணைந்து ‘வனதேவதை’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தியது. போட்டியில் மிகுதியான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் வி.இராதிகா மரம் நடுதலைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் க.பாலாஜி மரம் நடுதலிலும் இலக்கியப் போட்டியிலும் கலந்து கொண்டவர்களைச் சிறப்பித்து நன்றியுரை வழங்கினார்.