ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மரம்நடு விழா

கோவைப்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக மரம் நடு விழாவும், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வுக் கவிதைப் போட்டியும் நடத்தப் பெற்றன. மரம் நடுதல் வாரத்தின் இறுதி நாளினை முன்னிட்டுக் கல்லூரியின் மைதானத்தைச் சுற்றிலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் களப் பணியாளர்கள் மரம் நடுதலைத் தொடங்கினர். 

இதனை முன்னிட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறையும் நாட்டுநலப்பணித் திட்டமும் இணைந்து ‘வனதேவதை’ என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடத்தியது. போட்டியில் மிகுதியான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை வழங்கினர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் வி.இராதிகா மரம் நடுதலைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் க.பாலாஜி மரம் நடுதலிலும் இலக்கியப் போட்டியிலும் கலந்து கொண்டவர்களைச் சிறப்பித்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...