மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலைவாய்ப்புத் துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணைதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்விணையதளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுபித்தல், கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடனும், புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வர வேண்டும்.
பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.
இவ்விணையதளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுபித்தல், கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடனும், புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, கடவுச் சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வர வேண்டும்.
பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.