ஈஷா யோகா மையத்தில் ஜூலை 9 அன்று குருபௌர்ணமி அனுசரிப்பு

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பௌர்ணமி விழா ஜூலை 9ஆம் தேதியன்று (ஞாயிற்று கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா மையத்திற்கு வருகைபுரிந்து, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நாளில் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகியின் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில் சத்குரு சொற்பொழிவு அளிப்பதுடன் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும், இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பினை டாடாஸ்கை குரு தொலைக்காட்சி (#1060) அல்லது http://isha.sadhguru.org/guru-purnima/ ஆகியவற்றில் காணலாம்.

மேலும், அன்றைய தினம் தியானலிங்கத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பால் மற்றும் நீர் அர்பணிப்பு நடைபெறும். மாலை 6.30 மணிக்கு லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் மற்றும் மஹாஆரத்தி நடைபெறவுள்ளது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...