கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் குரு பௌர்ணமி விழா ஜூலை 9ஆம் தேதியன்று (ஞாயிற்று கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா மையத்திற்கு வருகைபுரிந்து, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நாளில் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகியின் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில் சத்குரு சொற்பொழிவு அளிப்பதுடன் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
மேலும், இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பினை டாடாஸ்கை குரு தொலைக்காட்சி (#1060) அல்லது http://isha.sadhguru.org/guru-purnima/ ஆகியவற்றில் காணலாம்.
மேலும், அன்றைய தினம் தியானலிங்கத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பால் மற்றும் நீர் அர்பணிப்பு நடைபெறும். மாலை 6.30 மணிக்கு லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் மற்றும் மஹாஆரத்தி நடைபெறவுள்ளது.
இந்நாளில் வரலாற்று சிறப்புமிக்க 112 அடி ஆதியோகியின் முன்னிலையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சியில் சத்குரு சொற்பொழிவு அளிப்பதுடன் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
மேலும், இந்நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பினை டாடாஸ்கை குரு தொலைக்காட்சி (#1060) அல்லது http://isha.sadhguru.org/guru-purnima/ ஆகியவற்றில் காணலாம்.
மேலும், அன்றைய தினம் தியானலிங்கத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பால் மற்றும் நீர் அர்பணிப்பு நடைபெறும். மாலை 6.30 மணிக்கு லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் மற்றும் மஹாஆரத்தி நடைபெறவுள்ளது.