சிம்ப்ளிசிட்டி செய்தி எதிரொலி: பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேர் மீது வழக்கு

நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கோவையின் முக்கிய இடங்களில் இருந்த பல்வேறு டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 



இதனால், ஊருக்கு நடுவே இருக்கும் டாஸ்மாக் பார்களுக்கு படையெடுத்த மது பிரியர்கள் பொது இடங்களிலேயே வைத்து மதுவை அருந்துவதும் பின்னர் காலி பாட்டில்களை சாலைகளில் எரிவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் இருக்கும் டாஸ்மாக் பார் முன்பு உள்ள காலி மைதானத்திலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் பலர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவதோடு, கண்ணாடி பாட்டில்களை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வீசிச்செல்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதையடுத்து சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.



இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஜி.வி.ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமர்ந்து மது அருந்தி வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (36), சிவக்குமார் (37), சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (40) மற்றும் சுரேஷ் (35) ஆகிய நான்கு பேர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...