நிர்மலா கலைக் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் முகாம் துவக்கம்

கோவை மாவட்டம் நிர்மலா அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று (ஜூலை 6) வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் இம்முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-



இந்திய தேர்தல் ஆணையம் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பணிகளை கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் இந்த சிறப்புப்பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி “எந்த ஒரு வாக்காளரும் விடுப்பட்டுவிடக் கூடாது” என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-21 வயதுக் குழுமத்ததைச்சார்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும் இச்சிறப்புப்பணியின்போது வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவுலகங்களில் படிவங்ளைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.electons.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்புப்பணியில் 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட படிவங்களை பெறுவர்.

இச்சிறப்புப்பணியின்போது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியளிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்புப்பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியல்களிலிருந்து  இச்சிறப்புப்பணியின்போது நீக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர்கள் ரவிக்குமார், அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...