நிர்மலா கலைக் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் முகாம் துவக்கம்

கோவை மாவட்டம் நிர்மலா அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று (ஜூலை 6) வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் இம்முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-



இந்திய தேர்தல் ஆணையம் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பணிகளை கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் இந்த சிறப்புப்பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி “எந்த ஒரு வாக்காளரும் விடுப்பட்டுவிடக் கூடாது” என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-21 வயதுக் குழுமத்ததைச்சார்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும் இச்சிறப்புப்பணியின்போது வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவுலகங்களில் படிவங்ளைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.electons.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்புப்பணியில் 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட படிவங்களை பெறுவர்.

இச்சிறப்புப்பணியின்போது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியளிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்புப்பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியல்களிலிருந்து  இச்சிறப்புப்பணியின்போது நீக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர்கள் ரவிக்குமார், அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...