கோவையில் தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் தொழிலதிபரிடம் 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இன்று 60 பக்க குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. 

கோவையில் கடந்த 2011ம் ஆண்டு தொழிலதிபர் ராஜவேல் என்பவருக்கு கர்நாடக மாநிலத்தில் டெண்டர் எடுத்துக்கொடுப்பதாக கூறி 2.40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாமல் சுகேஷ் சந்திரசேகர் தலைமறைவானார். அவரது தந்தை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். 

இந்நிலையில் முடக்கப்பட்ட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக பணம் பெற்ற வழக்கில் சுகேஷ் தில்லியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோவை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்காக தில்லி காவல் துறையினர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சுகேஷ் சந்திரசேகரின் தந்தை சந்திரசேகரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீடித்து நீதிபதி நம்பிராஜன் உத்திரவிட்டார். மேலும் இன்று சுகேஷ் சந்திரசேகர் மற்றும் சந்திரசேகர் இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகலை வழங்கவும் உத்திரவிட்டார். இதனையடுத்து இருவரும் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகரை தில்லி காவல் துறையினர் ரயில் மூலம் தில்லிக்கு அழைத்துசென்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...