தி வெஸ்டெர்ன் காட்ஸ் பள்ளியின் சார்பில் "வன மஷோத்சவ்" மரம் நடும் விழா கொண்டாட்டம்

தி வெஸ்டெர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியின் இயற்கை மன்றத்தின் சார்பில் "வன மஹோத்சவ்" எனப்படும் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 8ம் வகுப்பு மாணவி சம்யுக்தா எஸ்.சாம்ராஜ் வரவேற்புரையாற்றினார்.



கோவை பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் சுஜாதா, ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். காணோலி காட்சி மூலம் மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர். 

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இயற்கை மன்ற உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தில் 60 மரக்கன்றுகளை நட்டனர். மேலும், இயற்கை காய்கறி தோட்டத்தில் காய்கறி விதைகளை விதைத்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, இயற்கை மன்ற மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். விருந்தினர் முன்னிலையில் மரக்கன்றுகளை வைத்து பராமரிப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

நிறைவாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் 8ம் வகுப்பு மாணவி மெலோடிகா விஜயன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...