கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பயிற்சி

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. கோவையில் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், அனைத்து சாலையோர வியாபாரிகளையும் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுவரை, 4,000 பேருக்கு அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. 



இதற்கென, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் அமைக்கப்படும் சாலையோர கமிட்டியில், நகர் நல அலுவலர், போக்குவரத்து போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் பிரதிநிதிகள், உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இக்கமிட்டியினர், மாநகராட்சி பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை சாலையோர வியாபாரிகளுக்காக தேர்வு செய்யப்படும். அங்கு, வியாபாரிகளை வகைப்படுத்தி இடம் ஒதுக்கப்படும்.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிகையில், சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு உதவிகள் செய்கின்றன. அவற்றை வியாபாரிகள் அறியாமல் உள்ளனர். அதனால், சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். முன்னோடி வங்கி மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், திட்ட அலுவலர், உணவு கலப்பட தடுப்பு பிரிவினர், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்பர். அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் அழைக்கப்படுவர். மத்திய - மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி, மானியம், உணவு பண்டங்கள் தயாரிப்பது, விற்பதில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை, குப்பையை கொட்ட வேண்டிய இடங்கள் உள்ளிட்டவற்றை, அலுவலர்கள் விளக்குவர். திட்டம் தொடர்பான தொகுப்புரை புத்தகம் தயாராகி வருகிறது. விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.' இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...