தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் வரும் ஜூலை 6-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.



கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை கேரளா கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு கூறியதாவது:-

அரசு மணல் குவாரிகளில் போதிய அளவு மணல் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல் விலையும் அதிகரித்து உள்ளது. 

கோவை மாவட்டத்தில் கட்டுமான பணிக்கு நாள் ஒன்றுக்கு 1000 லோடு மணல் கிடைக்கப் பெற்ற நிலையில் தற்போது 150 முதல் 200 லோடு மணல் மட்டுமே கிடைப்பதால் கட்டுமான தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எம்.சாண்ட் மணல் முழுமையாக கிடைக்க மூன்று, நான்கு மாதங்கள் கடக்கின்றன. குவாரிகளில் எம்.சாண்ட் மணல் கிடைக்க மாநில அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கட்டுமான பணிகள் முடங்கி இருப்பதால் கட்டுமான தொழிலில் நேரிடையாக ஈடுபட்டுள்ள 4 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை நீக்குதல், பத்திரப்பதிவு கட்டணத்தை குறைத்தல் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து கட்டுமான அமைப்புகளின் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. 6ம் தேதி மாலை கோவையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வஉசி மைதானம் வரை பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...