புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரத்தினபுரி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை இரத்தினபுரி பகுதி 7ம் நெம்பர் பாலம் அருகே 1554-ம் எண் கொண்ட டாஸ்மாக் கடையும், புது பாலம் அருகே 1552 எண் கொண்ட இரண்டு மதுபான கடைகள் இயங்கி வரும் நிலையில் சுண்ணாம்பு கால்வாய் அருகில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனா லோகு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, இரத்தினபுரி பகுதி கொலை, கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது. மேலும் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் மதுபான கடையை அச்சத்துடன் தாண்டி செல்லும் நிலையே உள்ளது. தற்போது புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான கடை முன்னாள் மேயருக்கு சொந்தமானது.  ஏற்கனவே அப்பகுதியில் அமைந்துள்ள 2 மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் 3-வதாக மேலும் ஒரு கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது.

இவ்வாறு இரத்தினபுரி மக்கள் தெரிவித்னர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...