தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகை பொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவ்வப்போது, இவ்வகை போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், குட்கா, பான்மசாலா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வகை போதை பொருட்கள் முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் என்னுடன் வந்தால் அவற்றை விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காட்டுவேன்' என்றார்.

அவ்வப்போது, இவ்வகை போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், குட்கா, பான்மசாலா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வகை போதை பொருட்கள் முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் என்னுடன் வந்தால் அவற்றை விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காட்டுவேன்' என்றார்.