உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவ சிகிச்சை வழங்க குழந்தைகளின் தாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை அடுத்த பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியைச் சார்ந்த ஜீவிதா என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். அம்மனுவில், தனக்கு 8 வயது பெண் குழந்தையும், 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த இரு குழந்தைகளும் பிறவியில் இருந்தே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனது மகன் பள்ளிக்கு செல்வதில்லை. இரண்டு குழந்தைகளின் உடல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்களுக்கு வசதி இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து மருத்துவர்கள் சொல்ல மறுக்கின்றனர். குழந்தைகளின் பிரச்சனையை கண்டறிந்து அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜீவிதா கூறுகையில், இரண்டு குழந்தைகளும் தினமும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சிறுவன் உடல் பருமனால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறான். இரண்டு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற அரசு உதவி செய்ய வேண்டும்' என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை அடுத்த பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியைச் சார்ந்த ஜீவிதா என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். அம்மனுவில், தனக்கு 8 வயது பெண் குழந்தையும், 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த இரு குழந்தைகளும் பிறவியில் இருந்தே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனது மகன் பள்ளிக்கு செல்வதில்லை. இரண்டு குழந்தைகளின் உடல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்களுக்கு வசதி இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து மருத்துவர்கள் சொல்ல மறுக்கின்றனர். குழந்தைகளின் பிரச்சனையை கண்டறிந்து அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜீவிதா கூறுகையில், இரண்டு குழந்தைகளும் தினமும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சிறுவன் உடல் பருமனால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறான். இரண்டு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற அரசு உதவி செய்ய வேண்டும்' என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.