குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதால் அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவ சிகிச்சை வழங்க குழந்தைகளின் தாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை அடுத்த பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியைச் சார்ந்த ஜீவிதா என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். அம்மனுவில், தனக்கு 8 வயது பெண் குழந்தையும், 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த இரு குழந்தைகளும் பிறவியில் இருந்தே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனது மகன் பள்ளிக்கு செல்வதில்லை. இரண்டு குழந்தைகளின் உடல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்களுக்கு வசதி இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து மருத்துவர்கள் சொல்ல மறுக்கின்றனர். குழந்தைகளின் பிரச்சனையை கண்டறிந்து அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜீவிதா கூறுகையில், இரண்டு குழந்தைகளும் தினமும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சிறுவன் உடல் பருமனால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறான். இரண்டு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற அரசு உதவி செய்ய வேண்டும்' என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...