குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதால் அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவ சிகிச்சை வழங்க குழந்தைகளின் தாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை அடுத்த பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியைச் சார்ந்த ஜீவிதா என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். அம்மனுவில், தனக்கு 8 வயது பெண் குழந்தையும், 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த இரு குழந்தைகளும் பிறவியில் இருந்தே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனது மகன் பள்ளிக்கு செல்வதில்லை. இரண்டு குழந்தைகளின் உடல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்களுக்கு வசதி இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து மருத்துவர்கள் சொல்ல மறுக்கின்றனர். குழந்தைகளின் பிரச்சனையை கண்டறிந்து அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜீவிதா கூறுகையில், இரண்டு குழந்தைகளும் தினமும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சிறுவன் உடல் பருமனால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறான். இரண்டு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற அரசு உதவி செய்ய வேண்டும்' என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...